1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூரில் 558 பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

முதுகுளத்தூர் ஸ்ரீவடக்குவாசல் செல்வி அம்மன் மன்றத்தின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி பக்தர்கள் 558 பேர் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாகச் சென்றனர்.   ஆடி மாதத்தை முன்னிட்டு, முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில், செல்வி அம்மன் மன்றத்தின் சார்பாக 558 பக்தர்கள் கலயம் எடுத்தனர்.…

அனுமதியின்றி கபடி போட்டி: 5 பேர் கைது

முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை கபடி போட்டி நடைபெற்றது. இதற்காக, தேரிருவேலி சரக காவல் நிலையத்தில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் போட்டிகளை அக்கிராமத்து இளைஞர்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.   மேலும், கபடி போட்டியின்போது அணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அனுமதியின்றி போட்டி நடத்தியதாக, தேரிருவேலி காவல் நிலைய…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய நிலையில், ஒரேயொருவர் பகலில் மட்டும் பணியில் உள்ளதாக…

அமைச்சர், எம்.பி, மா.செ. முன்னிலையில் “பளார் பளார்”..

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அதிமுக நிர்வாகியை பளார் பளார் என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர், எம்பி முன்னிலையில் இந்த அடிதடி மோதல் நடந்தது. முதுகுளத்தூரில் ஒன்றிய கூட்டம் அமைச்சர் மணிகண்டன், எம்.பி. அன்வர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.…

முதுகுளத்தூர் வட்டார அளவில் ஆண்கள் இறகுப்பந்து போட்டி

முதுகுளத்தூர் ஸ்ரீகண்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி மைதானத்தில், வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இறகுப்பந்து போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் கே. காந்திராஜன் தலைமை வகித்தார். போட்டியில், 14 வயது ஒற்றையர் பிரிவில் 5 பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர் கே. சித்தார்த் முதலிடமும்,…

முதுகுளத்தூரில் வட்டார கைப்பந்து போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கைப்பந்துபோட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் தொடக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் வி.சந்தனகவிதா, என்.கமால்பாட்ஷா, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவில் 14 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 8 பள்ளிகள்…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கபடி போட்டி

முதுகுளத்தூரில் நடைபெற்ற வட்டார அளவிலான 19 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் கடலாடி பள்ளி முதலிடம் பெற்றது.  முதுகுளத்தூர் டிஇஎல்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடலாடி, சாயல்குடி, சிக்கல், தேரிருவேலி, பேரையூர் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 5 அணிகள் கலந்து கொண்டன.  இதில், கடலாடி அரசு…

முதுகுளத்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர்,கமுதியில் அதிமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க  பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஏ முனியசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், விவசாய பிரிவு இணைச் செயலர் கே.கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்…

முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து புதன்கிழமை கிராம மக்கள் காவல் நிலையத்தை  முற்றுகையிட்டனர்.   ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மருதங்கநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபாண்டியன். இவரை உடையார்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கி,…

காவிரி குடிநீர் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

முதுகுளத்தூர் வட்டம் முத்துராமலிங்கபுரம்பட்டியைச் சேர்ந்த மக்கள்   திங்கள்கிழமை காலி குடத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   முதுகுளத்தூர் அருகே செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பட்டிக்கு காவிரி குடிநீர் சரிவர வருவதில்லையாம். இதையடுத்து கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஊர்வலமாக வட்டாட்சியர்…