அனுமதியின்றி கபடி போட்டி: 5 பேர் கைது
முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை கபடி போட்டி நடைபெற்றது. இதற்காக, தேரிருவேலி சரக காவல் நிலையத்தில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் போட்டிகளை அக்கிராமத்து இளைஞர்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், கபடி போட்டியின்போது அணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, அனுமதியின்றி போட்டி நடத்தியதாக, தேரிருவேலி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் அசோகன் அளித்த புகாரின்பேரில், கருமல் கிராமத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த நெப்போலியன், வாணிமுத்து, சாத்தையா, சந்தவழியான், சௌந்தர்ராஜ் ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.