இதயங்களின் இருப்பிடம் முதுகுளத்தூர்
எத்தனையோ தேசங்கள் இயன்றளவு பார்த்தாகிவிட்டது ஆறோடும் ஊர்களையும் நீரோடும் சோலைகளையும் அருவிபாயும் ஓசைகளையும் அலைபாயும் கடலோரங்களையும் கண்களால் கண்டாகி விட்டது காதுகளால் கேட்டாகி விட்டது எங்களின் இதயத்திற்கு இதமாய் உள்ளங்களின் ஓய்வுத் தலமாய் எங்கள் ஊர்போல் எங்கும் இல என்பேன் சொல்லும்படி ஒன்றும் இல்லை சொல்லா திருப்பதற்கும் இல்லை…