பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன்
பிறந்தநாள் இன்று
புதுவை தந்த
புரட்சிக் கவிஞன்
புத்துலகு படைக்க
புறப்பட்ட செங்கதிர்
தமிழ்மானம் காத்திட்ட
தன்னிகரில்லா ஏறு
முறுக்கிய மீசை மீது பற்றுக்கொண்ட நறுக்கிய மீசை
போர்க்குரலால் அழித்தான்
தமிழின் மாசை
புரட்சி வறட்சியான போது
செதுக்கிய ஒவ்வோர்
எழுத்துக்குள்ளும் பகுத்தறிவு
திரட்சியானது
தமிழ்ச்சங்கை
முழங்கியவன்
மங்குநிலை
தமிழுக்கு வாய்க்குமெனில்
உயர்த்திப்பிடிக்க தன்னுயிர்
தரத்துணிந்தவன்
இத்தரை மக்களுக்காய்
நித்திரையற்று எழுதிக்குவித்த
பௌர்ணமிச் சித்திரை
நாம் போற்றி மகிழலாம்
இந்த தமிழின் சித்தரை
சமூக அவலங்களை
தமிழ்ச்சாட்டையால்
வெளுத்தவன்
மண்டிய மட இருளையும்
அறிவால் வெளுத்தவன்
உழைக்கும் வர்க்கத்திற்காய்
ஓங்கி ஒலித்த
சிம்மக் குரலோன்
சரிநிகரென பெண்மையை போற்றிய மலரோன்
கூழைக் கும்பிடு போட்டுக் கவிஞனானவனில்லை
ஏழைக்கும்பிட
எரிதழலாய் கொதித்தெழுந்தவன்
பணமாகும் சிலர்
படைக்கும் கவிதைகள்
ரணமாகும் சிலரின்
ரகசிய வரிகள்
கனவாகிப் போகாத
கவிதை உண்டென்றால்
இனமானம் காத்திட்ட
இவன்கவிதை மட்டுந்தான்
பாவேந்தரைப் போற்றுவோம்
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்