முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
முதுகுளத்தூர் அருகே பேரையூரில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து புதன்கிழமை கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மருதங்கநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபாண்டியன். இவரை உடையார்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கி, ஆட்டோவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பேரையூர் காவல்நிலையத்தில் சேதுபாண்டியன் புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் ஒருதலை பட்சமாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக மருதங்கநல்லூரைச் சேர்ந்த கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.