1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் சாவு

முதுகுளத்தூர் அருகே புல்லந்தையைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன்(37). முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தேரிருவேலியில் இருந்து கையகம் வழியாக பரமக்குடி செல்லும் தார் சாலையில் உள்ள பாலத்தின் மேல் அமர்ந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு…

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவரஞ்சனி…

எலக்ட்ரீசியன் யாசின் வஃபாத்து

எலக்ட்ரீசியன் யாசின் வஃபாத்து முதுகுளத்தூர் எலக்ட்ரீசியன் யாசின் இன்று 18.07.2016 மாலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும் இவர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் காதர் மற்றும் காஜா, அசன், சேட் உள்ளிட்டோரின் தகப்பனார் ஆவார்

முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்

முதுகுளத்தூர் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் 40-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களின் காவல் தெய்வமான ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை…

முதுகுளத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

முதுகுளத்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம், துணைத் தலைவர் பாசில் அமீன், பொறியாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை கால்வாய் மூலம் வெளியில் கொண்டு…

காத்தாகுளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் வழியாக ஓரிவயல் செல்லக்கூடிய தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   முதுகுளத்தூரில் இருந்து காத்தாகுளம் வழியாக எம்.சாலை, சடையனேரி, எம்.சவேரியார்பட்டணம், சமுத்திரம், மாரந்தை, ஓரிவயல், கடலாடி ஆகிய ஊர்களுக்குச் செல்வதற்கு அரசு பேருந்து இயங்கி…

குடிநீருடன் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்

முதுகுளத்தூர் 14 ஆவது வார்டு செல்லி அம்மன் கோயில் தெருவில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   இப்பகுதியினர் காவிரி கூட்டுக் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிடிக்கும் இடத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில்…

அதிமுக மகளிரணி இணைச் செயலருக்கு வாழ்த்து

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கீர்த்திகாமுனியசாமி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பரமக்குடி நகர்மன்றத் தலைவராக இவர் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவரை மாநில மகளிரணி இணைச் செயலராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில்…

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் எம்.எல்.ஏ. அஞ்சலி

பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி அஞ்சலி செலுத்தினார்.      முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக அவர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம்…

மணல் லாரியை மறித்து சாலை மறியல்: கிராமத்தினர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, மணல் அள்ளிச்சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டிலான் கிராமத்துக்குள் மணல் லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, உக்கிரபாண்டி மகன் திருச்செல்வம் (43) மற்றும் காசி மகன் சண்முகராஜா ஆகியோர்…