இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் எம்.எல்.ஏ. அஞ்சலி
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி அஞ்சலி செலுத்தினார்.
முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக அவர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கருப்பையா, ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்