அதிமுக மகளிரணி இணைச் செயலருக்கு வாழ்த்து
முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.கீர்த்திகாமுனியசாமி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பரமக்குடி நகர்மன்றத் தலைவராக இவர் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் இவரை மாநில மகளிரணி இணைச் செயலராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.கீர்த்திகாமுனியசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.