முதுகுளத்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்
முதுகுளத்தூர்,கமுதியில் அதிமுக சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஏ முனியசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன், விவசாய பிரிவு இணைச் செயலர் கே.கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர் வீட்டு வசதி சங்க தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர் திண்டுக்கல் குணசேகரன் நிதிநிலை அறிக்கை விளக்க உரையாற்றினார்.
கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் எஸ்.பி காளிமுத்து, முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், ஒன்றியக்குழுத் தலைவர் பாலு, மாவட்டக் கவுன்சிலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் சதன்பிரபாகர் நிதிநிலை அறிக்கை விளக்க உரையற்றினார்.
நகரச் செயலாளர் வி.கே.சி.முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.