இராமநாதபுரம்
கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம்

கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி கீழக்கரை நகர் சார்பில் பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம்
நகர் தலைவர் முஹம்மது ஜலீல் தலைமையில் நடைபெற்றது,இந்நிகழ்வில் நகர் செயலாளர் அகமது நதீர் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரை ஆற்றினார், பாரூக் ராஜா முகமது, அஷ்ரப் மற்றும் நகர் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இணைச் செயலாளர் ஹமீது பைசல் நன்றியுரை ஆற்றினார்,




