இராமநாதபுரம்

கமுதி தீயணைப்பு துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலருக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

கமுதி தீயணைப்பு துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலருக்கு தீ பாதுகாப்பு பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் பணி புரியும் இடங்களில் தீ விபத்து நிகழ்ந்தால் தீயை விரைந்து அணைப்பது மற்றும் பொதுமக்களை தீ விபத்தில் இருந்தும் எவ்வாறு மீட்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. தீயணைப்பு – மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ( ராமநாதபுரம்) பரிந்துரையின் பேரில், பயிற்சி முடித்த பாதுகாவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை கமுதி நிலைய அலுவலர் நாகநாதன் வழங்கி பாராட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button