இராமநாதபுரம்
மகாகவி பாரதியின் 144-வது பிறந்தநாள்

இன்று (11/12/2025) ராமேஸ்வரம் விவேகானந்தா மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மகாகவி பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி, மரக்கன்று நடவு செய்தும், இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் மரக்கன்றுகள் நடவு செய்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை பசுமை ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதியம்மா மற்றும் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.






