இராமநாதபுரம்
கரை வலையில் சிக்கிய அரிய வகை ஆமை!

கரை வலையில் சிக்கிய அரிய வகை ஆமை!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் புயலுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் கரை வலையில் நான்கு அரிய வகை கடல் ஆமைகள் உயிருடன் சிக்கின. மீனவர்கள் அவற்றை பத்திரமாக மீட்டு கடலில் விட்டனர். இந்தச் செயலைப் பாராட்டி வனத்துறையினர் மீனவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர். மண்டபம், பாம்பன், சேராங்கோட்டை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தற்போது கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.




