மதறஸா 13 ஆம் ஆண்டு விழா

கீழக்கரை அஸ்வான் சிறுவர்கள் மதறஸாவில் ஹஃபிஸ் முறையில் குர்ஆனை மனனம் செய்யும் குழந்தைகள்

அஹ்மது தெரு“மத்றஸத் அல் மனார்” சிறுவர்கள் மதறஸாவின் 13 ஆம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அஹ்மது தெரு“மத்றஸத் அல் மனார்” சிறுவர்கள் மதறஸாவின் 13 ஆம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது, அனைத்து ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சிக்கு மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா ஷைகுல் ஹதீஸ் இராமநாதபுரம் மாவட்டம் அரசு காஜீ அல்ஹாஜ் சலாஹூத்தீன் ஆலிம் ஜமாலி பாஜீல் உமரி அவர்கள் தலைமை வகித்தார்.
மெளலவி முஹம்மது மன்சூர் அலி ஆலிம் நூரி சிறப்புரை ஆற்றினார்,
எஸ் டி பி ஐ கட்சி மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
அஹமது ஹூசைன் ஆசிஃப் வாழ்த்துரை வழங்கினார்.மேலும்
அஹ்மது தெரு பொதுநல சங்கத்து உறுப்பினர்கள்,
இளைஞர்கள் ,மூத்த நிர்வாகிகள், நைனா முகமது,
ஏ.எஸ். கபார்கான்,
அலாவுதீன், சலாவுதீன்,செய்யது இப்ராஹிம்,நவ்ஃபல்
மதரஸா மாணவர்களுக்கு கேடயமும் பரிசுகளும் வழங்கப்பட்டது இவ்விழாவில் திரளாக மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர், சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




