இராமநாதபுரம்
தமுமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்வு

தமுமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்வு
இராமநாதபுரம் ஜுன்,1 :
இராமநாதபுரம் வழுதூரில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் தங்கியிருக்கும் 120 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு தமுமுக சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமுமுக மாநில பொது செயலாளர் ஜெ.ஹாஜாகனி,தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான்,மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,எஸ்.டி கூரியர் பூலாங்கல் சிராஜுதீன், மற்றும் மாவட்டநிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர் நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





