இராமநாதபுரம்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

இராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் பிரிவில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யா வட்டு எறிதல் பிரிவில் முதலிடத்தையும் மாணவர் ஜோஸ்வா 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் மாணவி ஹரிணி வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களை பள்ளிக் கல்வி குழுவினர் பரிசளித்து வாழ்த்தி மகிழ்ந்தனர். பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டிச் சிறப்பித்தனர்.





