தமிழ்நாடு

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 15.10.2025 முதல் 17.10.2025 வரை கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்வினை கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் துவக்கிவைத்தார். முதல் நாள் நிகழ்வில் மதுரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன, மாநில ஒருங்கிணைப்பாளர், சுரேஷ் கலந்துகொண்டு மாணவ-மாணவியருக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துவங்க அரசு வழங்கும் மானியங்கள், வங்கி கடன் உதவிகள் குறித்தும் பேசினார். நிகழ்வில் 63 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button