இராமநாதபுரம்
போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி. தொங்கி வைத்த ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்

போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி. தொங்கி வைத்த ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்

தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி மாநிலம் முழுவதும் போதை பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இராமநாதபுரம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் போதை பொருள்கள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படியே தொழிற்பெயர்ச்சி நிலையத்திலிருந்து பாரதி நகர் பஸ் ஸ்டாப் வரை 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றனர்.




