இராமநாதபுரம்
இரத்ததான முகாம்

இரத்த தானமுகாம்

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இரத்த தானமுகாம் நடைபெற்றது.
வி.தி. லீடர்ஸ் தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சமூக சேவையின் மூலம் கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக இந்த இரத்த தான முகாம் நடைபெற்றது.




