மார்ச் 21, துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு பிரைம் மெடிக்கல் செண்டருடன் இணைந்து 21.03.2014 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 வரை துபை சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள், துபை அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், ஈடிஏ அஸ்கான் குழும அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
தொழிலாளர்களுக்கென பிரத்யேகமாக நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படும்.