இராமநாதபுரம்
வடமாநில இளைஞருக்கு நீதி கேட்டு போஸ்டர்!

வடமாநில இளைஞருக்கு நீதி கேட்டு போஸ்டர்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞர் சுராஜ் என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தாக்கப்பட்ட இளைஞர் சுராஜுக்கு நீதி வழங்கக் கோரி, அஇஅதிமுக மாணவரணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.




