முதுவைக் கவிஞருக்கு இரங்கற்பா !
கடந்த 01.03.2014 சனிக்கிழமையன்று வஃபாத் ஆன ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்
முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஃபர் மன்பயீ அவர்களின் நினைவாய்
இரங்கற்பா !
( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி
அலைபேசி : 99 763 72229 )
* எங்கள் கிழக்கில்
இருளோதயம் !
* எங்கள் உரிமையை காக்க
எழுந்த …. அரிமா …………
எங்கேயோ
எங்களைக் கடந்து !
* மரணம் தொடாத
மனிதர் இல்லை தான் !
ஆனாலும் ……………
அதற்குள்ளாகவா …
மரணம் உங்களைப் பறித்துப் போனது ?
* உமர் ஜஃபரே !
வாழ்ந்த நாட்களை
நல்ல அமல்களால்
அலங்கரித்தீர்கள் !
சமுதாய வளர்ச்சிக்கும்
செல்வழித்தீர்கள் !
போதுமென்று …. இறைவன்
ஓய்வளித்தானோ ?
கண்ணீர் பொங்குகிறது !
* இறைநெறியும் நபிவழியும்
பேசிக்காட்டிய
நூலகம்
மூடிக் கிடக்கிறதே !
* திடல் பள்ளிவாசலின்
திடகாத்திரமே !
நீங்கள் சரிந்ததேனோ ?
மரணம் வந்து உங்களைச்
சாய்த்ததேனோ .. ?
* சொல்லால், கவிதையால்
தீன் பணியாற்றினீர்கள் !
ஒளிச்சுடராகத்தானே
வாழ்ந்து காட்டினீர்கள் !
* திடல் பள்ளிவாசல் ஜமாஅத்
ஒருங்கிணைப்பு !
* கல்வியில் விழிப்புணர்வு
இதிலெல்லாம்
கவனம் செலுத்தினீர்கள் !
* தமது ஜமாஅத்திற்கென
ஒரு பள்ளிக்கூடம்
லட்சியமாய் வைத்திருந்தீர்கள்
* முதுவை நல்ல
முகவரியை நல்ல இழந்தது !
* மொழி – தன்
உறவை இழந்தது !
* இதயமோ … அமைதியை
இழந்தது !
எங்கள் பயணத்தில்
நல்ல துணையொன்று
பிரிந்தது !
அல்லாஹ்வின் அழைப்பில்
மறுமைக்கு …
முந்திச் சென்றீர்கள் !
அவனுடைய தயவாலே
இன்ஷா அல்லாஹ்
சுவனமும் காண்பீர்கள் !
துஆ !
*இறைவா !
தலைமைய இழந்த
எங்கள் சகோதரர் உமர் ஜஃபரின் குடும்பத்திற்கு
ஆறுதலைத் தா !
பிரிவைத் தாங்கும் வலிமையத் தா !
* எங்கள் ரப்பில் ஆலமீனே !
உன் அருளுக்காய் ஏந்தும் கைகளை
வெற்றிடம் ஆக்காமல்
உன் ரஹ்மத்தை தந்து நிரப்புபவன் நீ !
அவ்வாறே செய்வாய் யா அல்லாஹ் !
ஆமீன் ! ஆமின் ! யாரப்பில் ஆலமீன் !