இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுப்பாட்டில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இராமேஸ்வரம் உட்கோட்டத்தில் இதுவரை 6 கஞ்சா வழக்குகளும், 38 சட்டவிரோத மது விற்பனை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி வழக்குகளில் 10 கிலோ கஞ்சா மற்றும் 846 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 13 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ் IPS., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button