இராமநாதபுரம்
கலைத் திருவிழா

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே உள்ள முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் 31. 10. 2025 அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



