இராமநாதபுரம்

நாட்டுநலப்பணி திட்டமுகாம்

செங்கோட்டைபட்டியில் நம்மாழ்வார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமுகாம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் வேளாண்மற்றும் தொழில்நுட்பகல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டமுகாம் செங்கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். கிராமத்தில் உள்ள குளம் மற்றும் கோயில்கள் தெருக்களை சுத்தம் செய்தனர்.

டெங்கு மலேரியா குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள். முன்னதாக வந்திருந்த கல்லூரிமாணவ மாணவியரை செங்கோட்டை பட்டி கிராமதலைவர்கள் வரவேற்றனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் பொன்னாடைபோர்த்தி கவுரபடுத்தினார்கள். பேரையூர் காவல்நிலைய சார்புஆய்வாளர் முருகேசன் கலந்துகொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button