General News

துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா

துபாய்: எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு அல் நஹ்தா எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மென்ட் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.

சேது வள்ளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் நா. லெட்சுமணன் மற்றும் வீர. அழகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

தமிழா விழி!! தமிழை படி!! தமிழரிடத்தில் தமிழில் பேசுவோம் எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூட முதலாம் ஆண்டு விழாவில் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க விரும்பும் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கலாம்.

Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2013/emirates-tamil-school-s-1st-annual-175624.html

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button