செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரா் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தமிழநாடு அரசின் சார்பில் ரூபாய் 3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறந்து வைக்க
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகின்ற 17ம் தேதி, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகைதர உள்ள நிலையில், முதல்வரை வரவேற்பது மற்றும் திமுக கழகத்தின் ஆக்க பணிகள் குறித்து மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,வனம் மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலும் மாவட்ட அவைத்தலைவர் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் நடைபெற்றது,
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள்,கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், உடனிருந்தனர்.





