இராமநாதபுரம்
கோரிக்கை மனு
கோரிக்கை மனு
சாதி பிரச்சனையாக திசை திருப்புவதை தடுக்க வலியுறுத்தல்
இராமநாதபுரம் மாவட்டம் முதலூர் கிராமத்தில் நிலவும் இருவீட்டு நில பிரச்சனையை சிலர் சாதி பிரச்சனை போல சித்தரித்து முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்தி, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என கோரி செம்பியநாடு முக்குலத்தோர் நலச்சங்கம் மற்றும் கிராம மக்கள் சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் SP அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனு அளிக்க வந்தவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கையில் ஏந்தியபடி SP அலுவலகத்திற்கு வந்தனர்.
கிராமத்தில் அமைதி நிலவ வேண்டும் எனவும், தேவையற்ற பிரச்சனைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




