இராமநாதபுரம்
அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்புபட்டை அணிந்துபோராட்டம் . . . .

அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்புபட்டை அணிந்துபோராட்டம் . . . .

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் நிரந்தரபணியில் உள்ள செவிலியர்கள் கருப்புபட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அதில் செவிலியர் பணியிடங்களை மறு சீரமைப்பு செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் தொகுப்பூதிய பணியில் உள்ள செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் அரசாணை 204 ஜ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது




