இராமநாதபுரம்
இராமநாதபுரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள ஐஎன்ஏ சரஸ்வதி மகளிர் பூங்காவில், ஆலம், அரசு, பலா, புன்னை, சரக்கொன்றை, மா,கொய்யா, செம்மரம், சந்தனம், புளி, வேம்பு,மகாகனி, போன்ற 25-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் மற்றும் ராமநாதபுரம் சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரீமதி, நூருல் அஸ்லினா மற்றும் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கோகுல், ஜனார்த்தனன், ஹரி குணா மற்றும் பசுமை விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





