இராமநாதபுரம்
எமனேஸ்வரம் : கைத்தறி பூங்கா திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி எமனேஸ்வரம், ஜீவா நகரில், 5 கோடி திட்ட மதிப்பீட்டில், சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்துவைத்து நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள், காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ. முருகேசன், கைத்தறி இயக்குநர் (மு.கூ.பொ) சு. அமிர்த ஜோதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




