இராமநாதபுரம்
அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்

பரமக்குடியில் அஇஅதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையின் கீழ் திருவாடானை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனையில் திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாடனை கிழக்கு ஒன்றியம் புல்லூர், கட்டி வயல் காடுவெட்டி, புலியூர் ஊராட்சியில் உள்ள முன்னாள் கேப்டன் மன்ற துணைசெயலாளர் வெங்கடேஷ் தலைமையில் மணிகண்டன்,ஹரிஹரன், மணிமாறன், தினேஷ்குமார், செந்தில்குமார், வினோத் கவியரசன், ஹரிபிரபு, முரளிதரன், செந்தில், சீனிவாசன், ஆகியோர் தேமுதிகவில் இருந்து விலகி தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டனர். உடன் வடிவேல் முருகன் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.





