இராமநாதபுரம்
ரேஷன் அரிசி கடத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து பரமக்குடிக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி வருவாய் குடிமை பொருள் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பரமக்குடி அருகே குமாரக்குறிச்சி கிராமத்தில் உள்ள கண்மாயில் ரேஷன் அரிசியை மூட்டைகளை இறக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள். குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் 39 சாக்கு முடைகளில் இருந்த 1760 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி கமுதக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடவுனில் ஒப்படைத்தனர்.





