இராமநாதபுரம்

பரமக்குடியில் சட்டவிரோத கஞ்சா விற்பனை: 1.2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

பரமக்குடியில் சட்டவிரோத கஞ்சா விற்பனை: 1.2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:

  1. மணிகண்டன் @ வில்லன் மணி*
  2. முத்துப்பாண்டி

அவர்களிடமிருந்து 1.2 கிலோ கிராம் கஞ்சா* பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

சமூக நலனை பாதிக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button