இராமநாதபுரம்
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா குறைதீர் முகாம்

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா குறைதீர் முகாம்;;

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ஜுலை14,15 ஆகிய இரு தினங்கள் பட்டா குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஹபிப் ரஹ்மான் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், பட்டா திருத்தம், உட்பிரிவு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இதில் தலைமை நில அளவர் வினோத் , கீழக்கரை வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்,




