கமுதி அருகே வீட்டின் கதவைஉடைத்து 54 பவுன்நகை வெள்ளி பணம் கொள்ளை .

கமுதி அருகே வீட்டின் கதவைஉடைத்து 54 பவுன்நகை வெள்ளி பணம் கொள்ளை .

ராமநாதபுரம் . . . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில் பாலமுருகன் (55) பூமாதேவி (45) தம்பதியரின் வீட்டில் பட்டப்பகலில் மர்மநபர்கள் வீட்டின் இரும்புகதவு பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பிரோவில் இருந்த 54 பவுன் தங்கநகைகள் 1 கிலோ வெள்ளி பொருட்கள் 20000 ரூபாய் பணத்தையும் திருடி கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளனர் பாலமுருகன் வெளிநாட்டில் பல வருடங்களாக வேலை செய்து வருவதாகவும் அவரது மனைவி பூமாதேவி விவசாய வேலைக்கு சென்றுவருவாராம் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில் அந்த வீட்டில் யாரும் இல்லாததை நோட்டம் விட்ட மர்மநபர்கள் பட்டபகலில் வீட்டிற்குள் புகுந்து திருடிவிட்டு சென்றுள்ளனர் இது குறித்து தகவல் அறிந்து மண்டலமாணிக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர் கொள்ளை நடந்த வீட்டிற்குள் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாயை வரவழைத்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர் கூடக்குளம் பகுதியில் பட்டபகலில் வீட்டின் கதவைஉடைத்து பணம் நகை வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




