இராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை முயற்சி குற்றவாளி வரதராஜன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது….

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை முயற்சி குற்றவாளி வரதராஜன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது….

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலைய பகுதியில் கருணாகரன் என்பவரை கொலை செய்ய முயன்ற வரதராஜன் என்பவர் மீது பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்நபர் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் IPS அவர்கள் பரிந்துரையின் பெயரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் IAS அவர்கள் வரதராஜன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார் .




