கவிதைகள் (All)
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.
மலையாள தேசத்து மாந்தரெல்லாம்
மனமுவந்து கொண்டாடும் பொன்னாளாம்
மண்ணுலகம் வந்து தன்
மக்களைக் காணவே
மகாபலி சக்கரவர்த்தி வரும்
நன்னாளாம்.- அவரை
மகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டாடும் திருநாளாம்.
வண்ண வண்ணப் பூக்கள் கொண்டு அத்தப்பூ கோலமென
வகை வகையாய்க் கோலமிட்டு
வெண்பட்டாடையுடுத்து
ஆவணித் திருவோண நாளில்
ஆலயங்களில் கூடி
வாமன மூர்தியை
ஆராதனைகள் செய்து ,
கதகளி , மோகினியாட்டம் ,
கோலாட்டம் கூடி ஆடி,
ஓணம் சத்யா என்னும்
ஒப்பற்ற விருந்து சமைத்து
உறவுகளுடன் கூடி
உற்சாகம் பொங்கிடவே
ஓணம் கொண்டாடுவோர்க்கு
உளமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன் வாழ்த்தும்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
5.9.2025.
