உலக தந்தையர் தினம்
உலக தந்தையர் தினம்- 15.06.2025
தாயுடன் சேர்ந்து நம்மை இந்த
தரணிக்குத் தந்தவர் தந்தை.
உயிரணு தந்தவர் தந்தை – நமது
உயர்வுக்கு உழைப்பவர் தந்தை
உணர்வினில் நமக்கு ஒழுக்கமதை
ஊட்டி வளர்ப்பவர் தந்தை .
அறிவை வளர்ப்பவர் தந்தை – மனதில்
அன்பை வளர்ப்பவர் தந்தை .
சோதனைகளைத் தாங்கி நம்மை
சாதனையாளனாக்கிடும் தந்தை.
வேதனைகளை மறைத்து நம்மை
வெற்றியாளனாக்குபவர் தந்தை .
முந்தைய தலைமுறை என்ற முறையில்
முன்னுதாரணமானவர் தந்தை. -நம்
முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு
முனைந்து உழைப்பவர் தந்தை .
அன்பை விதைப்பவள் அன்னை – உலக
அறிவைக் கொடுப்பவர் தந்தை .
பண்பை வளர்ப்பவன் அன்னை -நமக்கு
பண்பாட்டை கற்றுக்கொடுப்பவர் தந்தை.
செல்லம் கொடுப்பவள் அன்னை – நம்மை
செல்வந்தனாக்க உழைப்பவர் தந்தை.
கண்டித்து வளர்ப்பவன் அன்னை – தவறை
தண்டித்து திருத்த முனைபவர் தந்தை.
அனைத்து விதமான ஆசைகளடக்கி ,
அனைத்தையும் தியாகம் செய்பவர் தந்தை .
அவையில் முந்தியிருக்கச் செய்பவர் தந்தை .
அவையடக்கமும் சொல்லித்தருபவர் தந்தை
தந்தை என்பதன் பொருள் யாதெனில் – அனைத்தும்
தந்து நம்மை வளர்ப்பதனால்தானே அவரை ,
தந்தை என்று அழைக்கின்றோம் -இதை
சிந்தையில் வைத்து தினம் அவரை
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம். .
அன்பு மகன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்