1. Home
  2. கொரோனா

Tag: கொரோனா

கொரோனா சட்னி…….!

கொரோனா சட்னி…….! ********** தேவையான பொருட்கள்:- 6 சின்ன வெங்காயம் அல்லது அதற்கு இணையான பெரிய வெங்காயம். விரல் அளவு தோல் நீக்கிய இஞ்சி பூண்டு 5 பல் பச்சை மிளகாய்‌ 2 புளி… ஒரு புளியங்கொட்டை அளவு ஒரு தக்காளி பழம் இந்த சட்னி கலவையுடன் சேர்த்து…

கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகிறார்கள்.  குறிப்பாக பாஜக ஆளும்உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் தலைநகர் தில்லியிலும் நிலைமை  நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.  உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.…

கொரோனாவின் இரண்டாவது அலை

கொரோனாவின் இரண்டாவது அலை ஆபத்து நிறைந்ததென்றும் வருகின்ற நான்கு வாரங்கள் அதன் பரவல் உச்சத்தில் இருக்கும் என மத்திய அரசு எச்சரித்தாகிவிட்டது. நோயாளிகளின் எண்ணம் கூடிக்கொண்டிருக்கிறது. விழாக்களின் போது நம்மவர்களுக்கு கொரோனாவைப் பற்றிய சிந்தனையே இல்லை! தேர்தலின்போது அதை அடியோடு மறந்தோம்! டாஸ்மாக் கடைகளைக் கண்டால் கோவிட் பயந்து…

கொரோனா பல்கலைக்கழகம்

பள்ளிக்கூடம் போகாமலே பாஸ் பாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் கொரோனா பல்கலைக்கழகம் ______________________ருத்ரா

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா   யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், 2020-ம் ஆண்டு மனித குல வரலாற்றில் நெருக்கடி மிகுந்த ஆண்டாக இருக்குமென்று.  இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போன்ற சில நெருக்கடிகள்தான் உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தின. அந்த வரிசையில் கரோனாவும் வந்துசேர்ந்திருக்கிறது. உடல்நலம், பொருளாதாரம், கலாச்சாரம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் கொரோனா பெருந்தொற்று குலைத்துப் போட்டிருக்கிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாதிப்பு இந்திய அளவிலும் உலக அளவிலும் முன்னுதாரணமற்றது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி தரும் அறிக்கையை ‘இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்’ (சி.எம்.ஐ.இ.) வெளியிட்டிருக்கிறது.   இந்த அறிக்கையின்படி 2020 ஜூலையில் மட்டும் 50 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020 ஏப்ரலிலிருந்து 1.8 கோடி மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 21% பேர் முறைசார்ந்த பணிகளில் இருக்கிறார்கள். அமைப்புசாராப் பணிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசார்ந்த பணிகளின் பங்களிப்பு அதிகம் என்பதால் இது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு மோசமான செய்தி.   பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள். கட்டுமானப் பணிகளில் ஆரம்பித்து தொழிற்பேட்டைகள் வரை அவர்களின் பங்களிப்பு அதிகம். பொது முடக்கத்தின் காரணமாக ஏப்ரலில் இவர்களில் 9.12 கோடிப் பேர் வேலை இழந்தார்கள். அரசுகளும் பிழைப்புக்காக வந்த ஊர்களும் கைவிரித்துவிட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். மே மாதத்தில் 1.44 கோடிப் பேரும், ஜூனில் 4.45 கோடிப் பேரும், ஜூலையில் 2.55 கோடிப் பேரும் வேலைக்குத் திரும்பினார்கள். இன்னும் 68 லட்சம் பேர் வேலைக்குத் திரும்பவில்லை என்கிறது சி.எம்.ஐ.இ. அறிக்கை. முறைசார்ந்த துறைகளில் பணிபுரியும் மாதச் சம்பளக்காரர்களின் கதையோ வேறு. அவர்கள் தங்கள் வேலைகளை இழந்தால் அவற்றைத் திரும்பவும் பெறுவது கடினம். கொரோனா ஒரு நோயாக உண்டாக்கும் பாதிப்பைக் காட்டிலும், பொது முடக்கம் வழி உருவாக்கும் பாதிப்புகள் மோசமான விளைவுகளாக இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணம் ஆகிறது. கொரோனாவுடன் போராடிக்கொண்டே பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது பெரும் சவால் என்றாலும், இந்தியா அந்த சவாலில் கடுமையாகப் போராடவில்லை என்றால், பல கோடிப் பேரை சீரழிவில் தள்ளுவதாக அது அமைந்துவிடும். நிச்சயமாக பொது முடக்கத்திலிருந்து வேகமாக இந்தியா வெளியே வர வேண்டும். கடந்த காலப் பொருளாதார மந்த நிலைகளைவிட மோசமான ஒன்றைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறோம். மக்கள்மையக் கொள்கைகளே இந்த நிலையைச் சமாளிப்பதற்கு ஒரே வழி. – நன்றி .. ஆகஸ்ட் 25 அன்று தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து) 

கொரோனா பரிசோதனை

முதுகுளத்தூர் சுற்று வட்டார பொதுமக்கள் யாரேனும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.தாங்களுக்கு சிறிதளவில் சந்தேகம் இருக்குமேயானால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது அவமானபட கூடிய விசயம் கிடையாது.வருமுன் காப்பதே சிறந்தது. குறிப்பு: ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு செல்ல…

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்..

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்.. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் !   அப்படியானால் ஒரு தெருவிலுள்ள நோயாளியிடமிருந்து வேறு ஒரு தெருவில் இருக்கும் ஒருவருக்கு காற்றின் மூலம் நோய்  பரவுமா?  ஓர் அலசல். முதலில் கொரோனா நோய் எப்படியெல்லாம் பரவுகிறது என்று பார்ப்போம். இது கீழ்க்கண்ட மூன்று வகைகளில் பரவுகிறது. 1 Droplet infection -நீர்த்திவலைகள் மூலம் 2. Droplet nuclei – நுண்திவலைகள் கருக்கள் மூலம் – இதைத் தான் நாம் காற்றின் மூலம் பரவுதல் என்கிறோம் 3. Fomites – தொடுபொருட்கள் மூலம். இவற்றை  விரிவாகப் பார்ப்போம்.  அதாவது நோயுள்ள ஒருவர் இருமும்போதோ தும்மும்போதோ, பேசும்போதோ அல்லது பாடும்போதோ  வைரஸ் கிருமியானது மூச்சுக் குழல் வழியாக வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும்போது மூச்சுக் குழலிலுள்ள  காற்று, நீர்  மற்றும் இறந்துபோன அணுக்கள் இவைகளுடன் வைரஸ்  சேர்ந்து பல வகை அளவுகளில் உள்ள  நீர்த்துளிகளாக வெளியேறுகிறது. இது வேறு ஒருவரின் மூச்சுக் குழலுக்கு நேரடியாகவோ அல்லது  இந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது  இந்த வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டுவிட்டு அதே கைகளைக் கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதாலோ சென்று நோயை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் எப்படி அடுத்தவரின் மூச்சு மண்டலத்திற்கு செல்கிறது? இங்கேதான் இந்த நீர்த்துளியின்  அளவு  முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நீர்த்துளியின் அளவு 5 மைக்ரானிற்கு (ஒரு மைக்ரான் அல்லது ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) மேற்படும்போது அதை நீர்த்திவலை (droplet) என்கிறோம். அதுவே  5 மைக்ரானுக்குக் கீழாகும்போது அதை நுண்திவலைகள் (droplet nuclei…

கொரோனா துதி

10.07.2020  அன்று வீட்டில் கொரோனா  போட்டோ வைத்து விளக்கேற்றி , அன்று காலையும் மாலையும் இதைப் படித்து கருஞ்சீரகம், மிளகு, சுக்கு, கஷாயம் வைத்து நிவேதனம் செய்து அனைவரும் சாப்பிட்டால் நல்லது நடக்கலாம். 108ம்  ஊரடங்கு நாள்  கொரோன துதி.  1. கொரோனாவே போற்றி. 2. ஊஹானில் பிறந்தாய் போற்றி. 3.உலகெங்கும் பரவினாய்  போற்றி 4. உலகையே கலக்கினாய் போற்றி…

கொரோனா

கொரோனா தொற்று கண்டவர்களில் 85% பேருக்கு அறிகுறிகள் ஏதுமின்றி எப்போது வந்தது எப்போது சென்றது என்பது கூட அறிய முடியாத அளவில் வந்து செல்கிறது அறிகுறிகள் தோன்றுவோரில் பெரும்பான்மை சாதாரண அறிகுறிகளுடன் சரியாகிவிடுகிறார்கள் மரண விகிதம் நூறுக்கு ஒன்று என்ற அளவில் மட்டுமே இருக்கிறது இதனால் கொரோனா வந்தாலே…

கொரோனாவைக் குணமாக்கும் மூலிகை தேநீர் :

#கொரோனாவைக் #குணமாக்கும் #மூலிகை #தேநீர் : சித்த மருத்துவர் #வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி…