கொரோனா சட்னி…….!
கொரோனா சட்னி…….!
**********
தேவையான பொருட்கள்:-
6 சின்ன வெங்காயம் அல்லது அதற்கு இணையான பெரிய வெங்காயம்.
விரல் அளவு தோல் நீக்கிய இஞ்சி
பூண்டு 5 பல்
பச்சை மிளகாய் 2
புளி… ஒரு புளியங்கொட்டை அளவு
ஒரு தக்காளி பழம்
இந்த சட்னி கலவையுடன் சேர்த்து கொள்ள சிறிய அளவில் கறிவேப்பிலை, மல்லி, புதினா, போன்றவைகளில் ஏதேனும் ஒன்று, இவைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை…!
வெங்காயத்தைத் தவிர அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணை விட்டு அதில் கடுகு பொரியும் அளவுக்கு சூடு ஏறிய பின். அரைத்து வைத்த தக்காளி இஞ்சி பூண்டு விழுதை எண்ணெயில் விட்டு பச்சை வாடை போகும் வரை சுவைக்கு உகந்தளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
நன்கு வதங்கி உருண்டு திரண்டு வந்தபின் இறக்கி வைத்த பாத்திரத்தில்.
வெங்காயத்தை
தேங்காய்த் துருவல் போல் அரைத்து பச்சையாக சட்டினியுடன் சேர்த்து கிளறியதும் சுவையான கொரோனா சட்டினி ரெடி.
இட்லி தோசை சப்பாத்தி பூரி மற்றும் சாப்பாட்டில் கூட பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
குறிப்பாக அரைத்து வைத்த இந்த சட்னியை ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடவும் இதை சேமித்து வைக்கக்கூடாது காரணம் இதில் வெங்காயம் பச்சையாக அரைத்து சேர்க்கப்பட்டு உள்ளதால்.
ஏனென்றால்… உரித்த பச்சை வெங்காயத்திற்கு சுற்றியுள்ள வைரஸ் கிருமிகளை கவர்ந்திழுக்கும் ஆற்றல் உள்ளது என்பதுதான்.
தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119