-
News
-
September 19, 2020
அலட்சியத்தின் உச்சம் கொரோனா ஊரடங்கால் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்தத் தகவலும் மத்திய அரசிடம் இல்லை. அதனால் இழப்பீடோ, நிவாரணமோ வழங்க வேண்டிய அவசியமும் எழவில்லை என்று மத்திய தொழிலாளர்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார். இது இந்திய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா காலத்தில் மோடி அரசின் திட்டமிடாத முழு ஊரடங்கு அறிவிப்பால் தொழிலாளர்களின் காலடி ரத்தத்தைத் தார்ச்சாலைகளும் கண்ணீராக வடித்தன. சாலையின் குறுக்கும், நெடுக்குமாய்ச் சாரைசாரையாக உழைக்கும் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் பரிதவித்தனர். லட்சோபலட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் நடுரோட்டில்அலைந்து திரிந்த அவலத்தைக் கண்டு நாடே கண்ணீர் சிந்தியது. அப்போதெல்லாம் ஏசி அறையில் அமர்ந்து இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்குத் தொழிலாளர்களின் துயரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஒட்டுமொத்த மோடி அரசுக்கே தெரியாது என்றால், மக்கள் நலனில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை…