இராமநாதபுரம்
நிவாரண தொகை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி அரியகுடி அருகில் வாழவந்தாள் கிராமத்தை சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் இரு மகள்களான செய்யது அஸ்பிதா பானு(13) சபிக்கா பானு (9) இருவரும் சமீபத்தில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த செய்தி அறிந்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA தமிழ்நாடு அரசு வழங்கிய 8-லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மற்றும் ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் இருந்தனர்.





