இராமநாதபுரம்
சதுரங்க போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டார அளவில் சதுரங்க போட்டி செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது, போட்டிகளை பள்ளி தலைமையாசிரியை பாக்கிய ரோசரி தலைமையேற்று ஆரம்பித்து வைத்தார் இப்போட்டிகளில் அரசு உதவி பெறும் மேல்நிலை உயர்நிலை நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன்,கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





