இராமநாதபுரம்
அன்பு கரங்கள் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (15.09.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம், அன்பு கரங்கள் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் பங்கேற்று குழந்தை பயனாளிகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





