
ஏப்ரல் 12, துபாயில் இந்தியர் நல்வாழ்வு பேரவை நடத்தும் ரத்ததான முகாம்

துபாய் :
துபாயில் இந்தியர் நல்வாழ்வு பேரவை மற்றும் அல் பரஹா ரத்த வங்கி இணைந்து வரும் 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மாபெரும் ரத்ததான முகாம் நடத்த இருக்கிறது.
இந்தியர் நல்வாழ்வு பேரவை அமீரகத்தில் தேவையுடைய இந்தியர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரத்ததான முகாமை நடத்துகிறது.
உயிர் காக்க உதவும் இந்த ரத்ததான முகாமில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் 050 8565768 / 056 91 99 198 / 056 7969057 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.




