இராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது

இராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது.

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம், EM.அப்துல்லா குருதிக்கொடை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நவ,26 அன்று நடைபெற்றது.ஜாதி,மதம் பாராமல் தொடர்ந்து இரத்ததான சேவை செய்துவரும்
தமுமுக மருத்துவ சேவை அணியை பாராட்டி மருத்துவர் Dr.சின்னத்துரை அப்துல்லா MD,
முதன்மை மாவட்ட நீதிபதி மெஹ்பூப அலி கான், மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புச் செழியன்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் நூர்முகம்மது, கலந்துகொண்டு தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.இந்நிகழ்வில்
தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம்,
மருத்துவ சேவை நகர் செயலாளர் செய்யது அக்பர், நகர் தலைவர் முகமது தாஜுதீன் கலந்து கொண்டனர்.




