இராமநாதபுரம்

எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் தலைமையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ் டி பி ஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் முஹம்மது நதீம் , வழக்கறிஞர் இர்ஷாத் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு சட்டம் நமக்கு வழங்கியுள்ள சலுகைகள் என்னென்ன என்றும்,அடிப்படை உரிமைகள் குறித்தும், சட்டத்தைக் கொண்டு எவ்வாறு சமூக பிரச்சனைகளை அணுகலாம் என்றும், இன்னும் சட்ட ரீதியான விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார்கள்.

சிறப்பான முறையில் சட்ட விழிப்புணர்வு தகவல்களை வழங்கிய வழக்கறிஞர்கள் முஹம்மது நதீம் அவர்களுக்கும், இர்ஷாத் அவர்களுக்கும் தொகுதி தலைவர் சிறப்பு நினைவு பரிசினை வழங்கியும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
இறுதியாக சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றியுரை வழங்கினார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button