தமிழ்நாடு
மரம் நடும் விழா

மரம் நடும் விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, தேசிய மாணவர் படை சார்பாக 22.04.2025 அன்று உலக பூமி தினம் முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அஹமது கான் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் ஆகியோர் மரம் நடுதல் நிகழ்வினை மேற்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி இணை தேசிய மாணவர் படை அதிகாரி அப்துல் முத்தலிப் ஒருங்கிணைத்தார்.



