இராமநாதபுரம்

கடல் அட்டைகள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் கீழக்கரையில் முகமது மீரா சாகிப் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் சுமார் 400 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அப்டைகள் மற்றும் முகமது மீரா சாகிப்பை காவல்துறையினர், இராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

தகவல் அளித்த பொதுமக்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்IPS., அவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button